For Quick Alerts
For Daily Alerts
Just In
தேக்கு மர கடத்தல்காரர்கள் மீது துப்பாக்கி சூடு
ராஜபாளையம்:
வனத்துறைக்கு சொந்தமான தேக்கு மரத்தை முறை கேடாக வெட்ட முயன்றவர்களைவனக்காவலர்கள் சுட்டதில் ஒருவர் காயம் அடைந்தார்.
ராஜபாளையத்திலுள்ள சோமையாபுரம் தெருவில் வசித்து வருபவர் அய்யானர் (25).அதே பகுதியில் வசித்து வரும் கோவிந்தராஜ், மணிகண்டன், சேது, தேவராஜ்ஆகியோர் இணைந்து ராஜபாளையம் அருகிலிருக்கும் மேற்கு தொடர்ச்சி மலையில்தேக்கு மரங்களை முறை கேடாக வெட்டினர்.
அந்த சமயம் வனச்சரக அதிகாரிகள் ரோந்து வருவதைப் பார்த்து இவர்கள் தப்பி ஓடமுயற்சித்தனர். வனத் துறை காப்பாளர் ஒருவரை அரிவாளால் வெட்டினர். இவர்கள்மீது வனத்துறை அதிகாரிகள் சுட்டதில் அய்யனார் முழங்காலில் குண்டு பாயந்து காயம்ஏற்பட்டது. மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
Comments
Story first published: Thursday, October 19, 2000, 5:30 [IST]