ஆசியர்கள் அதிகம் செலவழிப்பது எதற்காக?
சிங்கப்பூர்:
சொகுசான வாழ்க்கைக்கும், பல நாடுகளுக்கு சுற்றுலா செல்லவும் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் செலவழிப்பதாக ஒரு கருத்துக் கணிப்புகூறுகிறது.
சிங்கப்பூரைச் சேர்ந்த அக்நீல்சன் மீடியா இன்டர்நேஷனல் என்ற அமைப்பு சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தி அறிக்கை வெளியிட்டது.
ஹாங்காங், சிங்கப்பூர், தைபே, கோலாலம்பூர், மணிலா, பாங்காக், ஜகார்த்தா ஆகிய நகரங்களைச் சேர்ந்த சுமார் 6,700 பேரிடம் இக் கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது.
ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் சமீப காலமாக அதிக பணம் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டனர். நிறைய பணக்காரர்கள் உருவாகியுள்ளனர்.
நடுத்தர மற்றும் உயர் தர மக்களும் அதிக அளவில் சொகுசான வாழ்க்கைக்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதிலும், பங்குச்சந்தையில் அதிகம் முதலீடு செய்வதையும், சுற்றுலா செல்வதற்கும் விரும்புகின்றனர்.
தனி நபர் வருமானம் அதிகரித்துவிட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 35 சதவீதம் வருமானம் அதிகரித்துள்ளது. 28 சதவீதம் பேரிடம் இரண்டுகார்களுக்கும் அதிகம் உள்ளன என்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications