விடுவிக்கப்பட்ட ராஜ்குமார் மருமகன் மருத்துவமனையில் அனுமதி
பெங்களூர்:
வீரப்பனால் விடுதலை செய்யப்பட்ட ராஜ்குமாரின் மருமகன் கோவிந்தராஜ்பெங்களூர் மல்லையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜுன் மாதம் சந்தனக் கடத்தல் வீரப்பனால், ராஜ்குமாருடன் கடத்தப்பட்ட நான்குபேரில் ராஜ்குமாரின் மருமகன் கோவிந்தராஜும் ஒருவர்.
உதவி டைரக்டர் நாகப்பா வீரப்பனிடமிருந்து தப்பி வந்துவிட்டார். 78 நாட்கள்சிறைக்கு பின்பு கடந்த 16-ம் தேதி வீரப்பனின் மருமகன் கோவிந்தராஜு வீரப்பனால்விடுவிக்கப்பட்டார்.
நீண்ட நாட்கள் காட்டில் இருந்ததால் உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்புதன்கிழமையன்று மல்லையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குராஜ்குமாரின் குடும்ப டாக்டர் ரமணராவ் சிகிச்சை அளித்து வருகிறார்.
கோவிந்தராஜ் உடல்நிலை குறித்து ரமணராவ் தெரிவிக்கையில், கோவிந்தராஜுக்குரத்த அழுத்தம் சீரான நிலையில் இருக்கிறது. இரண்டு நாட்கள் அவர் ஓய்வு எடுக்கவேண்டும் என்றார்.
கோவிந்தராஜை அவரது மனைவி லட்சுமி உடனிருந்து கவனித்து வருகிறார்.