ஆந்திராவில் 5 மீனவர்களை காணவில்லை
Subscribe to Oneindia Tamil
நெல்லூர்:
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தின் கடலோர கிராமமான தட்டிசட்லபலம்பகுதியைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள், புயலில் அடித்துச் செல்லப்பட்டதாகக்கூறப்படுகிறது.
வியாழக்கிழமை ஆந்திராவின் கடலோரப் பகுதிகளை புயல் தாக்கும் என்றுஅறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் புயல் பலவீனமடைந்து கரையைக் கடந்ததால்ஆந்திரா தப்பியது.
இந்த நிலையில், மசூலிப்பட்டன் கடற்கரையிலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றஐந்து மீனவர்களைக் காணவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும்நெல்லூர் மாவட்டம் தட்டிசட்லபலம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
இதுகுறித்து தகவல் கிடைக்கப் பெற்ற மாவட்ட நிர்வாகம், வருவாய் அதிகாரிகளைவிசாரணை நடத்துமாறு பணித்துள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications