மீண்டும் இயந்திரக் கோளாறு .. தப்பினர் விமான பயணிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் மீண்டும் ஒரு விமானம் விபத்திலிருந்து தப்பியுள்ளது. இம்முறையும்இயந்திரக் கோளாறுதான் இதற்குக் காரணம்.

சென்னை விமான நிலையத்தில் விபத்து தவிர்க்கப்பட்டுள்ள ஐந்தாவது சம்பவம் இது.இதனால், 58 பயணிகள் உயிர் தப்பினார்கள்.

மரணத்தில் பிடியில் இருந்தோ அல்லது மரண வாயிலுக்குச் சென்றோ பயணிகள்அடிக்கடி மீண்டு வருவது சென்னை விமான நிலையத்தில் சாதாரணமாகி விட்டது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கடந்த சில வாரங்களாகஇந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் செல்வது தெரிந்ததே.இயந்திரத்தில் ஏற்படும் கோளாறுகளால் இது போன்ற காலதாமதங்கள் ஏற்பட்டுவந்தது. கடந்த இரு மாதங்களில் இது வரை ஐந்து விமானங்கள் இயந்திரக்கோளாறுகாரணமாக மரணத்தின் பிடியில் இருந்து தப்பியிருக்கிறது.

இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை பெங்களூர் வழியாக கோவை செல்லும்அலையன்ஸ் விமானம் இயந்திரக்கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. 58பயணிகளுடன் ஆறு மணிக்கு புறப்பட வேண்டிய அந்த விமானம் இரவு 8 மணிக்குரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் அனைவரும்பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

மாலை நான்கு மணியில் இருந்தே காத்திருந்த பயணிகளுக்கு, இரவு எட்டுமணிக்குத்தான் விமானம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதில் நொந்து போனார்கள்.இருந்தாலும் ஒரு பக்கம் நிம்மதியாக உணர்ந்தார்கள்.

இந்த முறையும் விமானம் கிளம்பிச் சென்று நடுவானில் இயந்திரக்கோளாறுகண்டுபிடிக்கப்பட்டிருந்தால் என்னவாகியிருக்கும் என்று நடுக்கத்தோடு இருந்தார்கள்பயணிகள். தாமதத்தைவிட, உயிர் தப்பி திருப்தியே பயணிகளின் முகத்தில்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+