தந்தையைக் காப்பாற்றுங்கள் .. கருணாநிதியிடம் ராஜ்குமார் மகன்கள் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காட்டுக்கு யார் போகிறார்கள் என்பது குறித்துக் கவலையில்லை. எங்களது தந்தைபத்திரமாக திரும்பி வர வேண்டும். அவரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள் என்றுநடிகர் ராஜ்குமாரின் மகன்கள், தமிழக முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

பழ. நெடுமாறன்,கோபால் குழுவினர் ராஜ்குமார் இல்லாமல் திரும்பி வந்துள்ளநிலையில், ராஜ்குமாரின் மகன்கள் சிவராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார், புனீத்ராஜ்குமார் ஆகியோர் வெள்ளிக்கிழமை சென்னை வந்து தமிழக முதல்வர்கருணாநிதியைச் சந்தித்தனர்.

தங்களது தந்தையை மீட்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும்நடவடிக்கைகளைத் தொடருமாறு முதல்வரிடம் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

முதல்வரைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் அவர்கள் பேசுகையில், எங்களதுதந்தை மீட்கப்படாதது குடும்பத்தில் துயரத்தை அதிகப்படுத்தியுள்ளது.

அவர் விரைவில் திரும்ப வேண்டும் என்பதே எங்களது நோக்கம். சமாதானமுயற்சிகளுக்காக காட்டுக்கு யார் போகிறார்கள் என்பது குறித்து எங்களுக்குக்கவலையில்லை.

நாகப்பா தப்பி வந்தது உள்பட பல்வேறு காரணங்களால் எங்களது தந்தையின்விடுதலை தாமதமாகியுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

பழ. நெடுமாறன், கோபால் ஆகியோரை சந்திக்கவிருப்பதாகவும் ராஜ்குமார் மகன்கள்தெரிவித்தனர்.

ராஜ்குமார் மகன்கள் சந்திப்பு குறித்து முதல்வர் கருணாநிதி தெரிவிக்கையில், அவர்கள்சொன்னதைக் கேட்டுக் கொண்டேன். எங்களால் என்ன செய்ய முடியுமோ அதையும்அவர்களிடம் கூறினேன் என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+