விமான கட்டண பாக்கி: முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மீது வழக்கு
டெல்லி:
அரசு விமானத்தைப் பயன்படுத்தியற்கான ரூ.5.9 கோடி கட்டண பாக்கியைவசூலிக்கும் பொருட்டு முன்னாள் பிரதமர் சந்திரசேகருக்கு எதிராக டெல்லிஉயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு தொடுத்துள்ளது.
1990-91-ம் ஆண்டு சந்திரசேகர் பிரதமராக இருந்தார். அப்போது அரசுக்குச்சொந்தமான ராணுவ விமானத்தை தனது சொந்த நடவடிக்கைகளுக்குப்பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
அரசு முறைப் பயணத்துக்கு அரசு விமானத்தைப் பயன்படுத்தினால் கட்டணம் ஏதும்செலுத்த வேண்டியதில்லை. ஆனால், சொந்த நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தினால்கட்டணம் செலுத்தவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், சந்திரசேகர் அவ்விதம் தான் சொந்த நடவடிக்கைகளுக்காக அரசுவிமானத்தைப் பயன்படுத்தியற்கான கட்டணத்தைச் செலுத்தத் தவறிவிட்டார். அவர்பிரதமராக இருந்தபோதும், இப்போது பிரதமராக இல்லாதபோதும் கட்டணத்தைச்திருப்பிச் செலுத்தாமல் உள்ளார்.
அவருக்கு இது குறித்து பலமுறை நோட்டீஸ் அனுப்பிவிட்டோம். அவர் அதற்குப்பதிலும் தெரிவிக்கவில்லை. கட்டண பாக்கியையும் செலுத்தவில்லை. அவர் மொத்தம்ரூ. 5.91 கோடி கட்டண பாக்கியைச் செலுத்தவேண்டியுள்ளது.
இதையடுத்து அவர் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது என்று கூடுதல் சொலிசிடர் ஜெனரல் கே. சுத் தெரிவித்தார்.
இது தவிர, இதே காரணத்துக்காக முன்னாள் பிரதமர்கள் பி.வி. நரசிம்ம ராவ், தேவகவுடா ஆகியோருக்கு எதிராகவும் விரைவில் வழக்குத் தொடரப்படும் என்றார் சுத்.
பி.வி. நரசிம்ம ராவ் 1991 முதல் 96-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தார். அப்போதுஅவர் அரசு விமானத்தை சொந்த நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தியற்தாகாரூ.5.52 கோடி கட்டண பாக்கி வைத்துள்ளார்.
அதேபோல் 1996 முதல் 97 வரை பிரதமராக இருந்த தேவகவுடாவும் அரசு விமானப்பயன்படுத்தியதற்காக ரூ. 54.6 லட்சம் கட்டண பாக்கி வைத்துள்ளார் என்றார் சுத்.
இவ் வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ராவ் மற்றும் கவுடா மீதுவழக்குத் தாக்கல் செய்த பிறகு டிசம்பர் 7-ம் தேதிக்குள் அஃபிடவிட்டைத் தாக்கல்செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், இவ் வழக்குத் தொடர்பான அனைத்து தகவல்களையும் சமர்ப்பிக்கவேண்டும்என்றும் அரசை அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
அரசு விமானத்தைப் பயன்படுத்தியதற்கான கட்டண பாக்கியான ரூ.11.5 கோடியைமூன்று பிரதமர்களிடமிருந்தும் வசூலிக்கவேண்டும் என்று நீதிபதி பி.எல். வதேராஎன்பவர் தாக்கல் பொது நலன் வழக்கை அடுத்து மத்திய அரசு இப்போது நடவடிக்கைஎடுத்துள்ளது.
இதேபோன்று, பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தபோது அரசு விமானத்தைப்பயன்படுத்தியற்கான கட்டண பாக்கிக்காக சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்யாதவ் மீதும் ஒரு பொது நலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications