விமானப்படை ஹெலிகாப்டரை புலிகள் சுட்டு வீழ்த்தினர்
கொழும்பு:
இலங்கையின் வட பகுதியில் விமானப்படை ஹெலிகாப்டரை விடுதலைப் புலிகள்சுட்டு வீழ்த்தினர்.
இதுகுறித்து ராணுவ செய்தித்தொடர்பாளர் சனத் கருணாயகே கூறுகையில்,யாழ்ப்பாணம் பகுதியிலுள்ள நாகர்கோவில் என்ற இடத்தில் தரையில் இருந்த ராணுவவீரர்களுக்கு பொருட்களைத்தர விமானப்படையின் எம்.ஐ.-24 ரக ஹெலிகாப்டர்பயன்படுத்தப்பட்டது. அப்போது விடுதலைப் புலிகள் அதை சுட்டு வீழ்த்தினர்.
நாகர்கோவில் பகுதியில் உள்ள ராணுவ பதுங்கு இடங்கள் மூன்றையும் விடுதலைப்புலிகள் தாக்கினர். இதையடுத்து அந்தப் பகுதியில் நிலை கொண்டுள்ள ராணுவவீரர்களுக்கு உதவ விமானப்படை ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது.
ஹெலிகாப்டரில் இருந்த வீரர்கள் காப்பாற்றப்பட்டனர். அரசுக் கட்டுப்பாட்டில் உள்ளபகுதியில் ஹெலிகாப்டர் விழுந்தது. ஹெலிகாப்டரில் எத்தனை பேர் இருந்தார்கள்என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றார் அவர்.
வியாழக்கிழமை காலை கொழும்பு டவுன் ஹால் அருகே புலிகளின் தற்கொலைப்படை தாக்குதல் நடந்த நிலையில் விமானப்படை ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications