வாக்காளர் அடையாள அட்டை: அதிமுக, த.மா.கா புகார்
சென்னை:
வாக்காளர் அடையாள அட்டை வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளைதீவிரப்படுத்துவது குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கேட்க தலைமைதேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி தலைமையில் வெள்ளிக் கிழமை அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகஅதிமுக, தமாகா உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் புகார் செய்தனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்ததேர்தலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமேவாக்களிக்க முடியும் என்று தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் அடையாள அட்டை வழங்கும் பணியில் உள்ள மந்த நிலையை போக்கிஅனைவருக்கும் அடையாள அட்டை வழங்கும் பணியை துரிதப்படுத்துவது குறித்தும்,இந்த பணியில் அரசியல் கட்சிகளின் பங்கு குறித்து விவாதிக்கவும் மாநில தலைமைதேர்தல் அதிகாரி சாரங்கி தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிக் கூட்டத்தைகூட்டியிருந்தார்.
இந்த கூட்டம் சென்னை கோட்டையில் வெள்ளிக் கிழமை காலை நடைபெற்றது. திமுகசார்பில் விடுதலை விரும்பி, அதிமுக சார்பில் பி.எச்.பாண்டியன், கே.மலைச்சாமி,தமாகா சார்பில் பீட்டர் அல்போன்ஸ், விநாயகமூர்த்தி, பாஜக சார்பில் எச்.வி.ஹண்டே,குமாரவேலு, காங்கிரஸ் சார்பில் நீலன், கராத்தே தியாகராஜன், பாமக சார்பில்குபேந்திர குணபாலன், ராமமுத்துக்குமார், மதிமுக சார்பில் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் அடையாள அட்டை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள மந்தநிலையைபோக்கி துரிதப்படுத்தவும், வாக்காளர்களிடையே விழிப்புணர்ச்சியைஏற்படுத்த வேண்டிய அவசியம் குறித்தும் இந்த பணியில் அரசியல் கட்சிகளுக்குஉள்ள பங்கு பற்றியும் கூட்டத்தில் தேர்தல் அதிகாரி சாரங்கி வலியுறுத்தினார்.
அதிமுக, தமாகா உள்ளிட்ட எதிர்க் கட்சி பிரமுகர்கள் அடையாள அட்டைவழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications