நாகர்கோவிலில் பா.ஜ.க. மாநாடு தொடங்கியது
நாகர்கோவில்:
நாகர்கோவலில் இன்று (சனிக்கிழமை) பாரதீய ஜனதாவின் தென் மண்டல மாநாடு உற்சாகமாகத் தொடங்கியது.
தமிழகத்தில் பாரதீய ஜனதா முதன்முதலில் வெற்றி பெற்ற இடம் நாகர்கோவில். இங்கு பா.ஜ.க. சார்பில்எம்.பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பொன். ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராகியுள்ளார்.
அருள்மிகு நாகராஜா கோவில் மைதானத்தில் நடக்கும் இந்த மாநாட்டின் இறுதியில் பேரணியும் நடக்கவுள்ளது.
இந்த மாநாட்டில் மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி,திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு, அகில இந்திய பா.ஜ.க. துணைத் தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்திஉள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
பாரதீய ஜனதா அரசின் சாதனைகளை விளக்க இந்த மாநாடு நடத்தப்படுவதாக அக் கட்சி கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications