மாருதி உத்யோக் நிறுவன பங்குகளை வாங்க ஜெனரல் மோட்டார்ஸ் விருப்பம்
பீஜிங்:
உலகின் மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம்மாருதி உத்யோக் நிறுவனத்தின் பங்குகளை வாங்க ஆர்வம் கொண்டுள்ளது.
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு இந்தியாவிலும் சரி ஆசிய நாடுகளிலும் சரிதயாரிப்புக் கூடங்களோ, விற்பனைச் சந்தையோ அதிகம் இல்லை.
இதையடுத்து இந்தியாவிலும், ஆசிய நாடுகளிலும் தனது தொழிலை விரிவுபடுத்தஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந் நிலையில், மாருதி உத்யோக் நிறுவத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க இந்தியஅரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் மாருதி உத்யோக் நிறுவனத்தின்பங்குகளை வாங்க ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
பங்குகளை வாங்கிக் கொள்ளும்படி இந்திய அரசு கேட்டுக் கொள்ளும்படி எந்ததயக்கமும் இல்லாமல் பங்குகள் வாங்கிக் கொள்ளப்படும் என்று ஜெனரல்மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய நிறுவனம் கேட்டுக் கொள்ளாதவரை மாருதி நிறுவன பங்குகளை ஜெனரல்மோட்டார்ஸ் நிறுவனம் வாங்காது என்று அந் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர்தெரிவித்தார்.
ஏற்கெனவே தென் கொரியாவின் மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனமான தேவூநிறுவனத்தின் பங்குகளை வாங்கவும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம்திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications