For Daily Alerts
Just In
பாகிஸ்தானில் பஸ்கள் நேருக்கு நேர் மோதல் - 40 பேர் பலி
முல்டான் (பாகிஸ்தான்):
பாகிஸ்தானில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 40 பேர்பலியானார்கள். 70 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
பஞ்சாப் மாகாணத்தில் முல்டான் என்ற நகரம் அருகே சனிக்கிழமை இரவு இவ்விபத்துநேர்ந்தது.
முல்டான் நகருக்கு அருகே உள்ள ஜாங்-முல்டான் நெடுஞ்சாலையில் எதிர்எதிர்திசையில் வேகமாக வந்து கொண்டிருந்த இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் சம்பவ இடத்திலேயே 40 பேர் பலியானார்கள். 70 பேருக்கு மேல்காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் எல்லோரும் மருத்துவமனைகளில்சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் ஆபத்தான நிலையில்இருக்கின்றனர்.
Story first published: Sunday, October 22, 2000, 5:30 [IST]