புலிகளுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை - அமைச்சர் கதிர்காமர்
கொழும்பு:
விடுதலைப் புலிகளுடன் எந்த வித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றுஇலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் தெரிவித்தார்.
இது தொடர்பாக நார்வே நாட்டு தொலைக்காட்சி அவர் அளித்த பேட்டி:
இலங்கையில் 18 ஆண்டுகளாக புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையேகடும் சண்டை நடந்து வருகிறது. தற்போது புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளநிலையில், புலிகளுக்கும் அரசுக்கும் எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.
இருப்பினும், இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். ஆனால், அந்த முயற்சி எந்தஅளவுக்கு வெற்றி பெறும் என்று தெரியவில்லை.
ஏனெனில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நார்வே நாட்டு மத்தியஸ்தத்தை புலிகள்விரும்பவில்லை. மேலும், தங்களது கோரிக்கைகளை சண்டை மூலம் நிறைவேற்றிக்கொள்ளமுடியும் என்று புலிகள் கருதுகின்றனர்.
புலிகளின் நடவடிக்கையால் விரைவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடப்பதற்கானவாய்ப்பு ஏதும் இல்லை. இருப்பினும் நார்வே நாட்டுடன் சேர்ந்து அமைதிப்பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது என்றார்கதிர்காமர்.
யு.என்.ஐ.