கோவை, ஈரோட்டில் மில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
கோவை:
போனஸ் கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்தசுமார் 10,000 மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவுசெய்துள்ளனர்.
கோவையில் சமீபத்தில் நடைபெற்ற தொழிற் சங்கங்கங்களின் கூட்டுக் குழுக்கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் அண்ணா தொழிலாளர்கள் சங்கம், மறுமலர்ச்சி திராவிடத்தொழிலாளர்கள் சங்கம், இந்திய காங்கிரஸ் தொழிலாளர்கள் சங்கம், இந்திய தேசியபஞ்சாலைத் தொழிலாளர்கள் சங்கம், சி.ஐ.டி.யு உட்பட 9 தொழிற்சங்கங்களின்கூட்டமைப்பு கூடி பஞ்சாலைத் தொழிலாளர்களின் போனஸ் பிரச்சினை குறித்துவிவாதித்தது.
கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள பஞ்சாலைகளில் போனஸ் ஒப்பந்தம்ஏற்படாத பல மில்களின் முன்பு போராட்டம் நடத்த இக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.
இதையடுத்து இதுவரை போனஸ் உடன்பாடு ஏற்படாத மில்களில் ஞாயிற்றுக்கிழமை(அக். 22) வேலை நிறுத்தம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் சுமார் 10 ஆயிரம்தொழிலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
மேலும், கடந்த 90-ம் ஆண்டில் மூடப்பட்ட பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு மாநிலஅரசு நிர்ணயித்துள்ள நிவாரணத் தொகையை உயர்த்த வேண்டும்.
விடுபட்ட 25 மில்களின் தொழிலாளர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும்என அக் கூட்டுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications