மாநகராட்சி இடைத்தேர்தல்: திமுக-அதிமுக மோதல்

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

திருச்சி மாநகராட்சியில் 43-வது வார்டுக்கு நடந்த இடைத் தேர்தலில்திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால்,திருச்சி நகரில் சில பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது.

மாநகராட்சியின் 43-வது வார்டுக்கு ஞாயிற்றுக்கிழமை இடைத் தேர்தல் வாக்குப்பதிவுநடைபெற்றது. அப்போது கள்ளவோட்டு போடுவதாக திமுகவினரும்,அதிமுகவினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறினர்.

இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அதிமுக பிரமுகர்சிவகுமார் தாக்கப்பட்டார். இது தவிர இரு தரப்பினரும் கல்வீச்சில் ஈடுபட்டனர்.

இத் தாக்குதலைப் படம் பிடிக்க முயன்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனபோட்டோகிராபரும், நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை நிருபரும் திமுகவினரால்கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஜெயந்த் முரளி,கூடுதல் போலீஸாருடன் சென்று நிலைமையைக் கட்டுப்படுத்தினார்.

அதன் பிறகு அமைச்சர் கே.என். நேரு, அதிமுக பிரமுகர் டி. ரத்தினவேல் ஆகியோரும்சம்பவ இடத்துக்கு வந்து தங்களது கட்சித் தொண்டர்களைச் சமாதானப்படுத்தினர்.

அதன் பிறகு வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்றது. கள்ளவோட்டு போடமுயன்றதாக 7 பேர் கைது செய்யப்பட்டனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+