மண்ணில் புதைந்து 2 பேர் சாவு
கோவை:
உடுமலை அருகே மண் சரிந்து விழுந்ததில், இரண்டு பேர் உயிருடன் புதையுண்டுஇறந்தனர்.
கோவை மாவட்டம், உடுமலைப் பேட்டை அருகே தளி என்ற கிராமம் உள்ளது. இங்குராசாக் கவுண்டன் தோட்டத்தில் ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். இத்தோட்டத்தின் வழியாக குடிநீர் குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டது.
இதில், வாளவாடியைச் சேர்ந்த செல்வராஜ், திண்டுக்கல் அருகே உள்ள புதுப்பட்டியைச்சேர்ந்த ராமலிங்கம் ஆகியோர் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது குழிக்குள் எதிர்பாராதவிதமாக மண் சரிந்து விழுந்தது. இதில், இருவரும்உயிருடன் புதையுண்டனர். இந்த சம்பவத்தை அறிந்த சில தொழிலாளர்கள் சம்பவஇடத்திற்கு வந்தனர். புதையுண்ட இருவரையும் மீட்க மூடியிருந்த மண்ணைஅகற்றினர்.
ஆனால், செல்வராஜ், ராமலிங்கம் இருவரும் உயிருடன் இல்லை. இருவரது உடல்கள்மட்டுமே மீட்கப்பட்டது.
இருவரது உடலும் மருத்துவ பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.