ரூ. 98 லட்சம் மோசடி: 2 மில் அதிபர்கள் கைது
ஓசூர்:
சென்னையில் உள்ள பைனான்ஸ் கம்பெனிக்குச் செலுத்த வேண்டிய 98 லட்சரூபாயைச் செலுத்தாமல் மோசடி செய்ததாக ஓசூரில் உள்ள மில் அதிபர்கள் இரண்டுபேரைப் போலீசார் கைது செய்தனர். மேலும், நான்கு பேரைப் போலீசார் தேடிவருகின்றனர்.
ஓசூரைச் சேர்ந்தவர் ராமநாதன். இவரது மூன்று மகன்களுடன் சேர்ந்து ஸ்பின்னிங் மில்நடத்தி வருகிறார். மேலும் இருவர் இயக்குநர்களாகச் செயல்பட்டு வருகின்றனர்.
இவர்கள் கடந்த 1997ம் ஆண்டு சென்னையில் உள்ள ஒரு கம்பெனியில் 60 லட்சரூபாய் கடன் பெற்றனர். இவர்கள் 5 மாதங்களுக்கு ஒரு முறை 2.5 லட்ச ரூபாய்கடனைத் திருப்பிச் செலுத்த ஒப்புக் கொண்டனர். ஆனால், குறிப்பிட்டபடித் திருப்பிச்செலுத்தவில்லை.
இதனால் வட்டி அதிகரித்தது. தற்போது கடனும் அசலும் சேர்ந்து 98 லட்ச ரூபாயாகஉயர்ந்தது. இந்நிலையில், கடனைத் திருப்பிச் செலுத்தாததால், சென்னையைச் சேர்ந்தபைனான்ஸ் கம்பெனியினர் போலீசில் புகார் செய்தனர்.
இந்தப் புகாரையடுத்து போலீசார், ஸ்பின்னிங் மில் இயக்குநர்களான ரமேஷ் மற்றும்லட்சுமணன் ஆகியோரைக் கைது செய்தனர். தலைமறைவான மூன்று பேரைத் தேடிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications