For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கம்ப்யூட்டர்மயமாகிறது வருவாய்த் துறை

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

தமிழகத்திலுள்ள வருவாய்த்துறை அலுவலகங்கள் அனைத்தும்கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்டு வருவதாக மாநில வருவாய்த்துறை அமைச்சர்ரகுமான்கான் கூறியுள்ளார்.

ஈரோட்டில் நடந்த வருவாய்த் துறை பணியார்களின் சங்கத்தின் கூட்டமைப்புக்கூட்டத்தில், மாநில அமைச்சர் ரகுமான்கான் பேசியதாவது:

வருவாய்த் துறை ஊழியர்கள் சங்கத்தினர் பல ஆண்டுகளாக அங்கீகாரம் வேண்டும்என அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை அரசுகவனமாகப் பரிசீலனை செய்து வருகிறது.

விரைவில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்திற்கான அங்கீகாரம் பற்றியஅரசாணை பிறப்பிக்கப்படும்.

தமிழகம் முழுவதும் வருவாய்த் துறை பதிவேடுகளை கம்ப்யூட்டர்மயமாக்க அரசுதிட்டமிட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக 56 வட்டங்களில் பணிகள் துவங்கப்பட்டுசெயல்படுத்தப்பட்டு வருகிறது. கம்ப்யூட்டர்மயமாக்கல் பணிக்கு அனைவரும்ஒத்துழைப்புத் தர வேண்டும்.

வருவாய்த் துறை ஊழியர்கள் கோப்புகளைத் தேக்கி வைக்காமல், அவற்றைத் தனிமனித உயிர்போல போற்றி உடனடித் தீர்வு காண வேண்டும். இவற்றின் மீது உடனடிநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்த மாநாட்டில்,மாநில கைத்தறித் துறை அமைச்சர் என்.கே.கே பெரியசாமிபேசியதாவது:

வருவாய்த் துறை அலுவர்கள் சங்கம் உட்பட எந்த தொழிற்சங்கமாக இருந்தாலும்,கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்துவது மட்டுமே கொள்கையாகக்கொண்டிருக்கக் கூடாது.

நாட்டின் வளமையைக் கருத்தில் கொண்டு அரசு திட்டங்களை நிறைவேற்றுவதிலும்கவனம் செலுத்த வேண்டும்.மக்களின் பிரச்னைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்றார்.

இக் கூட்டத்தில் மாவட்ட ஈரோடு மாவட்டக் கலெக்டர் கருத்தையா பாண்டியன்தலைமை வகித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X