கோவையில் 28-ல் டாக்டர்கள் கருத்தரங்கு
கோவை:
கோவையில் வரும் அக்டோபர் 28ம் தேதி மெடிடெக்ஸ் 2000 என்ற கருத்தரங்குநடக்கிறது.
இந்த கருத்தரங்கில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொள்கின்றனர்.மத்திய அமைச்சர்கள் துவக்கி வைக்கின்றனர்.
கோவையில் மெடி டெக்ஸ் 2000 என்ற கருத்தரங்கு அக்டோபர் 28ம் தேதி நடக்கிறது.இந்த கருத்தரங்கை மத்திய சுகாதார இணை அமைச்சர்
சி. பி. தாக்கூர் துவக்கி வைக்கிறார். மத்திய சுகாதார அமைச்சர் எச். ராஜா, தமிழகசுகாதார அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இது குறித்து கோவையில் நடந்த மெடிக்கல் கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம்நிறைவேற்றப் பட்டது.
இதில், மெடிக்கல் பிராக்டிஷனர் என்ற பெயரில் போலியாக ஊடுறுவியுள்ள டாக்டர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எய்ட்ஸ் நோய்க்கு மருந்து எனக் கூறி பலர்பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர்.
உண்மையிலேயே எய்ட்ஸ் நோயைக் குணப்படுத்தும் மருந்தாக இருந்தால், இதனைஏற்றுக் கொள்ளலாம். ஆனால், தவறான பிரச்சாரத்தால் பொதுமக்கள் தங்களதுபொருட்களை இழக்கக் கூடாது. இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வுஏற்பட வேண்டும்.
விபத்துக்களில் சிக்கிக் கொள்ளும் பெரும்பாலானோர் உரிய நேரத்தில் உதவிகிடைக்காமல் இறக்க நேரிடுகிறது. விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க பொதுமக்கள்எப்போதும் அலட்சியாமாக நடந்து கொள்ளக் கூடாது. இது பற்றிய விழிப்புணர்வும்அவசியம் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications