மீன் கேட்டு "அடம் பிடிக்கும் ஆடு
கோவை:
கோவையில் மீன்களைச் சாப்பிடும் அதிசய ஆடு வளர்ந்து வருகிறது. இந்த ஆடுகுறைந்தபட்சம் வாரம் இருமுறை இரண்டு கிலோ மீன்களைச் சாப்பிடுகிறது. 5முட்டைகளும் இதற்கு வழங்கப்படுகின்றன.
கோவை கவுண்டம்பாளையத்தில் வசிப்பவர் பாபு. இவர் காய்கறிக் கடை நடத்திவருகிறார். சொந்த ஊர், திருச்செந்தூர் அருகே உள்ள பூச்சிக்காடு. ஆறு மாதங்களுக்குமுன்பு இவர் ஒரு ஆட்டுக் குட்டியை வாங்கி வளர்த்து வந்தார்.
இந்த ஆட்டுக் குட்டியுடன் குழந்தைகள் விளையாடி வந்தனர்.
அப்போது, வீட்டில் சமைக்கும் முட்டையை விளையாட்டாகக் கொடுத்துப் பழக்க,தொடர்ந்து முட்டையைச் சாப்பிடத் தொடங்கியது. பின்னர், சில நாட்கள் கழித்து மீன்துண்டுகளையும் கொடுக்க, ருசி கண்டு விட்டது ஆடு.
தற்போது பசும்புல்லைக் கூட தின்ன மறுக்கிறது. அசைவம் கொடுத்தால் மட்டுமேசாப்பிடுகிறது. எனவே, பாபு, வாரம் இருமுறை இதற்கு கண்டிப்பாக அசைவம்கொடுத்து விடுகிறார்.
மீன்களைப் பச்சையாகவே சாப்பிடும் இந்த ஆட்டிற்கு மத்தி மீன் என்றால், மிகவும்பிடிக்குமாம். இதனை ருசித்துச் சாப்பிடுகிறது. இது தவிர, வாரத்திற்கு 5முட்டைகளையும் சாப்பிட்டு விடுகிறது.
இந்த ஆட்டுக் குட்டியை இவர்கள், மேட்டுப்பாளையத்தில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோயிலுக்கு நேர்த்திக் கடன் நிறைவேற்ற வளர்த்து வந்தனர். ஆனால்,இப்போது அசைவம் சாப்பிடுவதால் இதனை கோயிலுக்குப் பயன்படுத்தக் கூடாதுஎனக் கருதி, இவர்களே வளர்க்கத் தொடங்கியுள்ளனர்.
இனி வரும் காலத்தில், பசித்தால் புலி கூட புல்லைத் தின்னும் நிலை உருவானால்ஆச்சர்யப்படுவதற்கில்லை.












Click it and Unblock the Notifications