கள்ளக் காதலுக்கு எதிர்ப்பு: தூக்கில் தொங்கிய ஜோடி

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கள்ளக் காதல் ஜோடி வேப்பமரத்தில் தூக்குப் போட்டுத்தற்கொலை செய்து கொண்டனர்.

ஈரோடு மாவட்டத்தில், காங்கயம் அருகே உள்ள குங்குமபாளையம் என்ற ஊரைச்சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது தோட்டத்தில் வேலை பார்த்து வந்தவர் வீரய்யன்(35). இவரது மனைவி லதா (25).

இருவருக்கும் 5 வயதில் அன்பழகன் என்ற மனைவியும், 3 வயதில் கமலி என்றமகளும் உண்டு. இவர்கள் காரைக்குடி அருகே உள்ள சிங்கம்புணரியைச்சேர்ந்தவர்கள்.

கருப்பண்ணன் தோட்டத்தில் குடியிருந்து வீரய்யன் குடும்பம் கூலி வேலை பார்த்துவந்தது. இந்நிலையில் கருப்பண்ணனின் மகள் சரஸ்வதி (18)-க்கும், வீரய்யனுக்கும்காதல் அரும்பியது. இலைமறைவு காய் மறைவாக இருந்த இவர்களது காதல்,வெளிச்சத்திற்கு வந்தது.

இதனால் சரஸ்வதியின் பெற்றோர்கள், வீரய்யனைச் சந்திக்கக் கூடாது எனத் தடைபோட்டனர். ஆனால், இந்த தடையை உடைத் தெறிந்து காதல் ஜோடிதலைமறைவானது.

போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் காங்கேயம் அருகே சிறுகிணறுஎன்ற ஊரில், ஒரு வேப்பமரத்தில் இருவரும் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+