மிட்சுபிஷி நிறுவனத்துக்கு பங்குகளை விற்கிறது இந்துஸ்தான் மோட்டார்ஸ்
டெல்லி:
இந்தியாவின் பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான்மோட்டார்ஸ் நிறுவனம் தனது பங்குகளை சர்வதேச நிறுவனமான மிட்சுபிஷிக்கு விற்கவிருப்பம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் பி.கே. சதுர்வேதிகூறியதாவது:
இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் தனது பங்குகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தைமிட்சுபிஷி நிறுவனத்துக்கு விரும்புகிறது. பங்குகள் விற்பதால் இந்துஸ்தான்மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு பயன் ஏற்படும் என்றால் மட்டுமே இந் நடவடிக்கைமேற்கொள்ளப்படும்.
பங்குகள் விற்பனையை விட நிறுவனத்தின் செயல்பாடும், தொழிலாளர்களின்நலனும்தான் முக்கியம். நிறுவனத்துக்கும், தொழிலாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படும்என்றால் பங்குகளை யாருக்கும் விற்கமாட்டோம்.
பங்குகளை வாங்கும் மிட்சுபிஷி நிறுவனம், இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்துக்குதொழில்நுட்பம் உள்பட மேலும் பல பிரிவுகளில் உதவி செய்ய முன்வந்தால், பங்குவிற்பனை குறித்த நடவடிக்கையில் இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் முழு வீச்சில்ஈடுபடும்.
ஆனால் பங்கு விற்பனை குறித்து இறுதி முடிவு செய்யப்படவில்லை. தற்போதுமிட்சுபிஷி நிறுவனமும் தனது நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்யும் பணியில்ஈடுபட்டுள்ளது. அப் பணிகளை அந் நிறுவனம் முடித்த பிறகு பங்கு விற்பனை குறித்துபேச்சு நடத்தப்படும் என்றார் சதுர்வேதி.