இலங்கை ராணுவத்துக்கு 10,000 வீரர்கள் தேவை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

ராணுவத்தில் காலியாக உள்ள உயர் பதவி உள்ளிட்ட அனைத்து நிலைகளுக்கும் சுமார்10 ஆயிரம் பேர் தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை ராணுவம்மேற்கொண்டுள்ளது.

மிகப் பெரிய அளவில் நடத்த உள்ள இந்த ஆளெடுப்பு நடவடிக்கைக்கானஅறிவிப்பை இலங்கை ராணுவம் திங்கள்கிழமை வெளியிட்டது. இது குறித்துஇலங்கை ராணுவ கமான்டர் லியோனெல் பாலகல்லே கூறியதாவது:

இலங்கை ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.விடுதலைப் புலிகளுடன் கடந்த பல ஆண்டுகளாக கடும் சண்டை நடந்து வருகிறது.

இச் சண்டையில் உயர் பதவிகளில் உள்ளவர்கள் உள்பட பலர் பலியாகியுள்ளனர்.இதனால், ராணுவத்தில் நிறைய காலி இடங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த காலி இடங்களைநிரப்புவதற்கான நடவடிக்கை இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுமார் 10 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். விடுதலைப் புலிகளுடன்நடக்கும் சண்டையில் இலங்கை ராணுவம் தொடர்ந்து ஈடுபடுவதற்கு ராணுவத்துக்குஇன்னும் 10 ஆயிரம் பேர் தேவைப்படுகிறது.

புதன்கிழமை முதல் ராணுவத்துக்கு ஆளெடுப்பு தொடங்கும். ராணுவத்துக்கு நிறையஆட்கள் தேவைப்படுவதால், உடல் வலுவுடன் மிகக் குறைந்த கல்வித் தகுதியுடன்இருப்பவர்களையும் ராணுவத்துக்குத் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் செப்டம்பர் 3-ம் தேதிக்குப் பிறகு விடுதலைப் புலிகளுடன் நடந்தசண்டையில் 266 ராணுவத்தினர் பலியாகியுள்ளனர். 2 ஆயிரத்துக்கும்அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என்றார் பாலகல்லே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+