"21 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை
சென்னை:
தி.மு.க ஆட்சியில் 21 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு ஒருகோடியே 90 லட்ச ரூபாய் காப்புத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்று தமிழகஅரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திங்கள் கிழமை தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:
மூன்று தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடையாக்க முதல்வர் கருணாநிதி 30 லட்சரூபாய் காப்புத் தொகை வழங்கினார்.
கவிஞர் முடியரசன், மயிலை சீனி. வேங்கடசாமி, சாமி சிதம்பரனார் ஆகியதமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் என்றும், ஒவ்வொருதமிழறிஞரின் நூல்களுக்கும் 10 லட்சம் ரூபாய் என்று மொத்தம் 30 லட்சம் ரூபாய்,அவர்களின் மரபுரிமையாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் முதல்வர் கருணாநிதிஅறிவித்திருந்தார்.
அதையொட்டி, மூன்று தமிழறிஞர்களின் நூல்களையும் நாட்டுடைமையாக்கிமொத்தம் 30 லட்சம் ரூபாய் காப்பு நிதியாக வழங்கி அரசு ஆணையிட்டது.
முதல்வர் திங்கள் கிழமை காப்புத் தொகை 30 லட்சத்தை தமிழறிஞர் மூவரின்மரபுரிமையாளர்களுக்கு, தமிழ் ஆட்சிமொழித் துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன்முன்னிலையில் வழங்கினார்.
கவிஞர் முடியரசன் மனைவி கலைச்செல்வி, மகன்கள் பாரி, குமணன், செல்வம்,மகள்கள் குமுதம், அன்னம், அல்லி ஆகிய 7 பேருக்கும் 10 லட்ச ரூபாயும், மயிலைசீனி.வேங்கடசாமியின் வாரிசுகள் அழகம்மாள், அன்புமணி ஆகிய இருவருக்கும் 10லட்ச ரூபாயும், சாமி சிதம்பரனாரின் வாரிசுகள் கோவிந்தராசன், வைரம், சீத்தாராமன்,ராதா ருக்மணி, ராஜசேகரன், செந்தில்குமார், ராஜேஷ்குமார் ஆகிய 7 பேருக்கும் 10லட்சம் ரூபாயுமாக மொத்தம் 30 லட்சம் வழங்கப்பட்டது.
தலைசிறந்த தமிழறிஞர்களின் நூல்களைத் தமிழக அரசு நாட்டுடைமையாக்குவதால்இந்நூல்களை யார் வேண்டுமானாலும் பதிப்பித்து வெளியிடலாம். நூலாசிரியர்மறைந்த பின்னும் அவரது நூல்கள் தொடர்ந்து வெளிவரவும் மக்களுக்கு எளிதாகக்கிடைக்கவும் இது வழி வகுக்கிறது.
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற (1996 மே ) இதுவரை தேவநேயப் பாவணார்,மறைமலையடிகள், திரு.வி.க., நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை, வ.உ.சி உள்ளிட்ட 21தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, மொத்தம் 190 லட்சம் காப்புத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா!












Click it and Unblock the Notifications