"21 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை
சென்னை:
தி.மு.க ஆட்சியில் 21 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு ஒருகோடியே 90 லட்ச ரூபாய் காப்புத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்று தமிழகஅரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திங்கள் கிழமை தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:
மூன்று தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடையாக்க முதல்வர் கருணாநிதி 30 லட்சரூபாய் காப்புத் தொகை வழங்கினார்.
கவிஞர் முடியரசன், மயிலை சீனி. வேங்கடசாமி, சாமி சிதம்பரனார் ஆகியதமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் என்றும், ஒவ்வொருதமிழறிஞரின் நூல்களுக்கும் 10 லட்சம் ரூபாய் என்று மொத்தம் 30 லட்சம் ரூபாய்,அவர்களின் மரபுரிமையாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் முதல்வர் கருணாநிதிஅறிவித்திருந்தார்.
அதையொட்டி, மூன்று தமிழறிஞர்களின் நூல்களையும் நாட்டுடைமையாக்கிமொத்தம் 30 லட்சம் ரூபாய் காப்பு நிதியாக வழங்கி அரசு ஆணையிட்டது.
முதல்வர் திங்கள் கிழமை காப்புத் தொகை 30 லட்சத்தை தமிழறிஞர் மூவரின்மரபுரிமையாளர்களுக்கு, தமிழ் ஆட்சிமொழித் துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன்முன்னிலையில் வழங்கினார்.
கவிஞர் முடியரசன் மனைவி கலைச்செல்வி, மகன்கள் பாரி, குமணன், செல்வம்,மகள்கள் குமுதம், அன்னம், அல்லி ஆகிய 7 பேருக்கும் 10 லட்ச ரூபாயும், மயிலைசீனி.வேங்கடசாமியின் வாரிசுகள் அழகம்மாள், அன்புமணி ஆகிய இருவருக்கும் 10லட்ச ரூபாயும், சாமி சிதம்பரனாரின் வாரிசுகள் கோவிந்தராசன், வைரம், சீத்தாராமன்,ராதா ருக்மணி, ராஜசேகரன், செந்தில்குமார், ராஜேஷ்குமார் ஆகிய 7 பேருக்கும் 10லட்சம் ரூபாயுமாக மொத்தம் 30 லட்சம் வழங்கப்பட்டது.
தலைசிறந்த தமிழறிஞர்களின் நூல்களைத் தமிழக அரசு நாட்டுடைமையாக்குவதால்இந்நூல்களை யார் வேண்டுமானாலும் பதிப்பித்து வெளியிடலாம். நூலாசிரியர்மறைந்த பின்னும் அவரது நூல்கள் தொடர்ந்து வெளிவரவும் மக்களுக்கு எளிதாகக்கிடைக்கவும் இது வழி வகுக்கிறது.
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற (1996 மே ) இதுவரை தேவநேயப் பாவணார்,மறைமலையடிகள், திரு.வி.க., நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை, வ.உ.சி உள்ளிட்ட 21தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, மொத்தம் 190 லட்சம் காப்புத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்!












Click it and Unblock the Notifications