மரங்கள் விழுந்து அங்கோர்வாட் கோவில் வளாகம் சேதம்
Subscribe to Oneindia Tamil
நாம்பென் (கம்போடியா):
கம்போடியாவின் வட பகுதியில் வீசிய சூறாவளிக் காற்று மற்றும் கடும் மழையால்,மரங்கள் விழுந்ததில், உலகப் புகழ் பெற்ற அங்கோர் கோவில் வளாகத்தின் சிலபகுதிகள் சேதமடைந்தன.
இந்தக் கோவில் 9 மற்றும் 12-வது நூற்றாண்டுக் காலத்தில் கட்டப்பட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கோவில் பாதுகாப்பு மையத்தின் தலைவர் ஆங் வோன்கூறுகையில், கோவிலில் உள்ள தரைப் பகுதி மிகவும் மெல்லியதாகி விட்டது. காரணம்,கழிவு நீர் வசதி சரியாக செயல்படாததால், தரை முழுவதிலும் ஈரப் பதம் அதிகமாகிவிட்டது.
தற்போது காற்று, மழை காரணமாக மரங்கள் கோவில் வளாகத்தில் விழுவதால்தரைத்தளம் மேலும் சேதமாகியுள்ளது. தொடர்ந்து மரங்கள் விழுவது நீடித்தால்,கம்போடியாவின் தேசியப் பாரம்பரியமான அங்கோர் வளாகம் பாதிப்புக்குள்ளாகும்என்றார் அவர்.












Click it and Unblock the Notifications