பாண்டியில் 3 கோவில்களில் உண்டியல் பணம் திருட்டு
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் திங்கள்கிழமை இரவில் மூன்று கோவில்களில் உண்டியல்களைஉடைத்து அதிலிருந்த பணத்தை சிலர் திருடிச் சென்றனர்.
அரியாங்குப்பம் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மாரியம்மன் கோவில்,திரெளபதி அம்மன் கோவில், விநாயகர் கோவில் ஆகிய மூன்று கோவில்களின்உண்டியல்களும் உடைத்து அதிலிருந்த பணம் திருடப்பட்டுள்ளது.
கோவில்களை சுத்தம் செய்ய வந்தவர் உண்டியல்கள் உடைக்கப்பட்டிருப்பதைப்பார்த்து கோவில் டிரஸ்டியிடம் கூறினார். இதையடுத்து போலீஸில் புகார்செய்யப்பட்டது.
மொத்தம் திருடப்பட்ட தொகையின் மதிப்புத் தெரியவில்லை.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications