மதுரையை கலக்கிய கன மழை
மதுரை:
மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் திங்கள்கிழமை முழுவதும் பலத்தமழை பெய்தது.
திங்கள்கிழ இரவு முழுவதும் இந்த கன மழை நீடித்தது. இதனால், மதுரை நகரின்பெரும்பாலான பகுதிகள் நீரில் மிதந்தன.
கடந்த 24 மணி நேரத்தில் மதுரை நகரில் 59 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக மதுரை மாவட்டத்திலுள்ள மூன்று முக்கிய அணைகளில் நீர்வரத்துஅதிகரித்தது.
திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் பகுதியில் உள்ள மருதாநதியில் தண்ணீர்வரத்து நன்றாக இருந்தது. அதிகபட்சமாக செவ்வாய்க்கிழமை காலை 8.30மணியளவில் 60 சென்டிமீட்டர் மழை பதிவானது.
பெரியார் அணையில் 124.80 அடி தண்ணீர் இருந்தது. அணையின் நீர் மட்டம் 136அடியாகும். அணைக்கு விநாடிக்கு 324 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.அணையிலிருந்து விநாடிக்கு 1600 கன அடி நீர் வெளியேறிக் கொண்டுள்ளது.
வைகை அணையில், நீர் மட்டம் 61.50 அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டஅளவு 71 அடியாகும்.
யு.என்.ஐ.