ராமநாதபுரத்தில் 2 இலங்கைத் தமிழர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் பஸ் நிலையத்தில், இரண்டு இலங்கைத் தமிழர்களை போலீஸார் கைதுசெய்தனர்.
கேணிக்கரை புதிய பஸ் நிலையத்தில் திங்கள்கிழமை போலீஸார் வழக்கம் போலரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது இரண்டு பேர் சந்தேகம் வரும் வகையில்நின்று கொண்டிருந்தனர். இருவரையும் போலீஸார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் இலங்கையின் மன்னார் பகுதியைச் சேர்ந்த செபாஸ்டியன்குரூஸ், பேசாலை என்ற பகுதியைச் சேர்ந்த நேசநாயகம் என்று தெரிய வந்தது.
இருவரிடமும் முறையான பாஸ்போர்ட், விசா இல்லை. இருவரையும் போலீஸார்வெளிநாட்டவர் மற்றும் பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்செய்தனர்.
இருவரும் 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications