For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை தமிழ்ப் பள்ளியில் வெடிகுண்டு

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கையின் கிழக்கு அம்பாரை மாவட்டத்திலுள்ள தமிழ்ப் பள்ளி ஒன்றிலிருந்து 2.5கிலோ எடையுள்ள வெடிகுண்டை போலீஸார் கைப்பற்றினர்.

பொட்டுவில் என்ற பகுதியில் இந்தப் பள்ளி உள்ளது. பள்ளியின் ஆசிரியர் குடியிருப்புப்பகுதியில் குண்டு வைக்கப்பட்டிருந்தது. கொழும்பு நகரிலுள்ள சிறப்பு அதிரடிப்படைபோலீஸாரிடம் ஒரு நபர் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில், பள்ளியில் குண்டுவைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து அம்பாரை போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். பள்ளியில் சோதனை நடத்தபோலீஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சோதனையின்போது வெடிகுண்டு சிக்கியது.

இதற்கிடையே, வடக்கு இலங்கை முழுவதும் நடந்த பல்வேறு மோதல்களில் ஆறுவிடுதலைப் புலிகள் உள்பட 7 பேர் கொல்லப்பட்டதாக பாதுகாப்புத் துறை வட்டாரத்தில்தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு திரிகோணமலை பகுதிகளில் ஆறு விடுதலைப் புலிகள்கொல்லப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் தாக்குதலில் ஒருவர் இறந்தார்.இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X