வீரப்பன் கோரிய கைதிகளுக்கு காவல் நீடிப்பு
ஈரோடு:
வீரப்பன் விடுவிக்கக் கோரியுள்ள மூன்று கைதிகளும் மீண்டும் பவானி நீதிமன்றத்தில்ஆஜர் செய்யப்பட்டனர்.
கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க வீரப்பன் விடுவித்த கோரிக்கைகளில் தமிழர்விடுதலைப் படையைச் சேர்ந்த 5 பேரை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும்ஒன்று.
இந்நிலையில், சிறையில் உள்ள தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த 5 பேரல் மூன்றுபேர் வெள்ளிக்கிழமை பவானி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
முத்துக்குமார், சத்தியமூர்த்தி, மணிகண்டன் ஆகிய மூவருக்கும் பவானி நீதிமன்றத்தில்வரும் நவம்பர் 10-ம் தேதி வரை காவல் நீடிக்கப்பட்டுள்ளது.
அரசு தூதுவராக 5 முறை காட்டுக்குச் சென்ற நக்கீரன் கோபால், கடந்த முறைசென்றபோதும் கைதிகள் விடுதலை கோரிக்கையை வீரப்பன் திரும்ப வலியுறுத்தினான்.இக் கோரிக்கையை நிறைவேற்றாத வரையில் ராஜ்குமாரை விடுவிக்க மட்டேன்எனவும் கூறியுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.