போனஸ் கோரி உண்ணாவிரதம் .. 5 பேர் மீது வழக்கு
கோவை:
போனஸ் கோரி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த 5 பேர் மீது தற்கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
கோவை கணபதியில் ஒரு தனியார் நிறுவனத்தின் இன்ஜினியரிங் தொழிற்சாலைசெயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் 3,500 ரூபாய்க்கு மேல் சம்பளம்பெறுவோருக்கு போனஸ் இல்லை என அறிவிக்கப்பட்டது.
இதனால் தொழிற்சாலையில் பணியாற்றிய பார்த்திபன், கதிர்வேல், வீரமணி,தாமோதரன், சுப்பையன் ஆகிய 5 உட்பட பலருக்குப் போனஸ் கிடைக்கவில்லை.இதை எதிர்த்து இவர்கள் 5 பேரும் தொழிற்சாலை முன்பு சாகும் வரை உண்ணாவிரதம்இருக்க முடிவு செய்தனர்.
இந்த உண்ணாவிரதத்தை கடந்த இரண்டு நாட்களுக்கு முன் துவக்கினர். பல்வேறுபேச்சுவார்த்தைகள் நடத்தியும், உண்ணாவிரதத்தை இவர்கள் கைவிடவில்லை.இதையடுத்து தொழிற்சாலை நிர்வாகம் போலீசுக்குத் தகவல் கொடுத்தது.
போலீசார் 5 பேரையும் கைது செய்தனர். இவர்கள் மீது தற்கொலைக்கு முயற்சிசெய்ததாக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 309ன் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.












Click it and Unblock the Notifications