காஷ்மீரில் 12 பேர் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த பல்வேறு சம்பவங்களி 6தீவிரவாதிகள் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீகரிலுள்ள தாரிக் குஜ்ரி என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை காலை போலீஸ்காவலிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ஒரு தீவிரவாதியை பிற தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.
இதேபோல, ராணுவ வீரர்களுடன் தொடர்பு வைத்திருந்த குலாம் முகம்மது என்பவரைகாந்தர்பால் என்ற இடத்தில் பிற தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். மறறும் பிஜேரியாஎன்ற இடத்தில் வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத ஒருவரது உடல்மீட்கப்பட்டது.
மற்றொரு சம்பவத்தில், ஒரு வீட்டுக்குள் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்தவர்கள் மீதுசரமாரியாகச் சுட்டனர். இதில் ஒருவர் இறந்தார். அவர் ஜம்மு காஷ்மீர் போலீஸின்சிறப்புப் பிரிவில் காவலராக இருந்து வந்தவர்.
தெற்கு காஷ்மீரிலும் வியாழக்கிழமை இரவு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதற்கிடையே, வடக்கு காஷ்மீரில் சோகம் என்ற இடத்தில் பாதுகாப்புப் படை வீரர்கள்நடத்திய தாக்குதலில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதேபோல,துப்தா தோக் என்ற இடத்தில் 2 தீவிரவாதிகளும், தோடா மோரா என்ற இடத்தில் ஒருதீவிரவாதியும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தெற்கு காஷ்மீரின் புல்வா மாவட்டத்தில், எட்டு கிராமங்களில் தீவிரவாதிகள்மறைந்திருப்பதாக வந்த தகவலையடுத்து அந்தக் கிராமங்களுக்குப் போகும் அனைத்துவழிகளையும் பாதுகாப்புப் படை வீரர்கள் வெள்ளிக்கிழமை காலை முதல் சீல்வைத்துள்ளனர்.
கிராமத்தில் உள்ள அனைத்து ஆண்களும் வயல் வெளிகளில் கூடி நிற்குமாறுஉத்தரவிடப்பட்டனர். வீடு, வீடாக புகுந்து சோதனை நடத்தவும் வீரர்களுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.