வரைந்தார் முருகன் .. எழுதுகிறார் சாந்தன்
சென்னை:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றுள்ள கைதி சாந்தன்,சிறையில் இருந்தவாறே சிறுகதைகள் மற்றும் கதைகள் எழுதுகிறார்.
ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற கைதிகளான முருகன், சாந்தன்ஆகியோர் தங்களிடம் மறைந்துள்ள திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
முருகன் படம் வரைவதில் தனக்கு உள்ள திறமையை சமீபத்தில் வெளிப்படுத்தினார்.வேலூர் சிறையில் முருகன் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் இங்கு ஓவியப் போட்டிநடத்தப்பட்டது. அதில் முருகன் பல்வேறு படங்களை வரைந்து அசத்தினார். அவர்வரைந்த பெரியார் படத்திற்கு முதல் பரிசு கிடைத்தது. மற்றொரு கைதியான ராபர்ட்பயஸ் குழந்தை படத்தை வரைந்தார்.
இந்த நிலையில் மற்றொரு தூக்குத் தண்டனைக் கைதியான சாந்தன் கதைகள்எழுதுகிறார். தான் இதுவரை எழுதிய பல கதைகளை பத்திரிகைகளுக்கு அவர்அனுப்பிவருகிறார்.
இவர்கள் தவிர தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட முருகனின்மனைவி நளினி மேற்படிப்புப் படிக்க சிறை அதிகாரிளுக்கு விண்ணப்பித்துள்ளார்.ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோரும் திருநெல்வேலி மனோன்ணீயம் சுந்தரனார்பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புப் படித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications