ஏர் இந்தியா குண்டுவெடிப்பு: கைதான சீக்கியர்களுக்கு காவல் நீட்டிப்பு
வான்கூவர் (கனடா):
ஏர் இந்தியா விமானம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்ட வழக்கில் கைதான சீக்கியதீவிரவாதிகள் இருவருக்கு காவல் நீட்டிக்கப்பட்டது.
1985-ம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான கனிஷ்கா என்ற போயிங்விமானம் கனடாவில் உள்ள வான் கூவரில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்தது.அதில் 329 பேர் இருந்தனர்.
அயர்லாந்து வான் எல்லைக்கு அப்பால் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில்விமானம் வெடித்துச் சிதறியது. இதில், விமானத்தில் இருந்த அனைவரும் இறந்தனர்.விசாரணையில் விமானம் குண்டு வைத்துத் தகர்ப்பட்டது தெரியவந்தது.
இது பற்றி கடந்த 15 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந் நிலையில்,இவ் வழக்கில் முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்பட்ட சீக்கிய தீவிரவாதிகள் அஜெய்ப்சிங் பாக்ரி, ரிபுதாமன் சிங் மாலிக் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவர் மீதும் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இருவரும் காவல் நீட்டிப்புக்காக இருவரும் வான்கூவரில் நீதிமன்றத்தில்செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். இருவருடைய காவலையும் நீதிபதிநீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
இவ் வழக்கில் ஹர்தியால் சிங் ஜோஹல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்று போலீஸார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications