திமுகவுக்கு அடுத்த கட்சி நாங்கள்தான் .. பா.ஜ.க.

Subscribe to Oneindia Tamil

கோவை:

சட்டசபைத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் பாரதிய ஜனதாக் கட்சி மூன்று தொகுதிகளில் போட்டியிடும் என பா.ஜ.,கட்சியின் மாநில துணைத்தலைவரும், கோவை எம்.பி.,யுமான ராதாகிருஷ்ணன் கூறினார்.

கோவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியாதவது:

வரும் சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடரும் என்பதில் சந்தேகமே இல்லை. தமிழகத்தில் தி.மு.க.,விற்கு அடுத்தபடியாகஇரண்டாவது இடத்தில் பா.ஜ.க. உள்ளது. இதே போன்று தி.மு.க.,விற்கு அடுத்தபடியாக பா.ஜ.க அதிக இடங்களில் போட்டியிடும் கட்சியாக இருக்கும்.

கோவை மாவட்டத்தில் இக்கட்சி போட்டியிட மூன்று தொகுதிகளை ஒதுக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியிடம் கோரிக்கை வைக்கும். கோவையில்கோவை கிழக்கு, திருப்பூர், பொங்கலூர் ஆகிய சட்டசபைத் தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது.

பா.ஜ.க ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட கட்டுப்பாடு மிக்க கட்சியாகும். ஜாதிக் கட்சிகளைப் பொறுத்தவரை இவை ஜாதி அடிப்படையிலானஜனநாயகம் நிலைக்காது என்பதை விரைவில் புரிந்து கொள்ளும். பாட்டாளி மக்கள் கட்சி தற்போது ஜாதி அடிப்படையை விட்டு விலகி வருகிறது.

இந்து முன்னணித் தலைவர் ராமகோபாலனைச் சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளிக்க கோரிக்கை விடுப்பேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+