கடன் தொல்லை.. தூக்கில் தொங்கிய டாக்டர் தம்பதி
கோவை:
கோவை அருகே கடன் தொல்லையால் டாக்டர் மற்றும் அவரது மனைவி தூக்குப் போட்டுதற்கொலை செய்து கொண்டனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள காளியப்ப கவுண்டன்புதூரைச்சேர்ந்தவர் டாக்டர் செல்வராஜ் (59). இவர் தனது மனைவி பாலாமணி (55) உடன் வசித்துவந்தார்.இவர் தனது மகள்களுக்குத் திருமணம் முடித்து விட்டு ஓய்வாக இருந்தார்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இவரது வீடு பூட்டிக் கிடந்தது. இதனால்அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகமடைந்தனர். இதையடுத்து வீட்டின் அருகேதுர்நிாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் கதவை உடைத்து திறந்து பார்த்தனர். உள்ளே செல்வராஜூம் அவரது மனைவிபாலமணியும் ஒரே கயிற்றில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டனர்.
இவர்கள் இருவரும் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தனர். இதில் , தங்களது தற்கொலைக்குகாாரணம், கடன் தொல்லை தான் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.