காங்கேயம் விபத்தில் 4 பேர் சாவு
ஈரோடு:
காங்கேயம் அருகே கார்-வேன் மோதலில் டாக்டர் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்இறந்தனர். இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் காயமடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர் டாக்டர் வீரபத்திரன் (65). இவர்தனது மனைவி சரஸ்வதி (35) மற்றும் மருமகள் ராஜகாந்தம், ரம்யா (11), பிரவீன் (9),ஆகியோருடன் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள உறவினரின்திருமணத்திற்குச் சென்று விட்டு அம்பாசிடர் காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.
காரை டிரைவர் மணிகண்டன் ஓட்டி வந்தார். அம்பாசிடர் கார், காங்கேயம் அருகேஉள்ள வெள்ளகோயில் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திருவாரூரில்இருந்து ஒரு வேன் திருப்பூரை நோக்கி வந்து கொண்டிருந்தது.
இரண்டு வாகனங்களும் காங்கேயம் அருகே உள்ள பகவதிபாளையம் என்ற இடத்தில்மோதிக் கொண்டன. இந்த சம்பவத்தில் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த வீரபத்திரன்,டிரைவர் மணிகண்டன், பின் சீட்டில் அமர்ந்திருந்த வீரபத்திரனின் மனைவி சரஸ்வதிஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
பலத்த காயமடைந்த ராஜகாந்தம், ரம்யா, பிரவீன் ஆகியோர் மருத்துவமனையில்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு ராஜகாந்தம் இறந்தார். வேனில் பயணம்செய்த சரவணன், பாரதி, உமாநாத், வெங்கடேஷ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
வேனில் பயணம் செய்த அனைவரும் திருப்பூர் பனியன் தொழிற்சாலையில்பணிபுரிபவர்கள். தீபாவளிக்கு ஊருக்குச் சென்று விட்டு வேனில் திரும்பிக்கொண்டிருந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் நடந்த இரு விபத்துக்களில் 8 பேர்இறந்துள்ளனர். அடுத்தடுத்து நடந்த விபத்துக்கள் இந்த மாவட்டத்தையே சோகத்தில்ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications