குண்டர் சட்ட கைதிகள் .. அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்
சென்னை:
குண்டர் தடுப்புச் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள்ஓராண்டுக்கு பிறகும் சிறையில் இருப்பது துரதிருஷ்டவசமானது என்று சென்னை உயர் நீதிமன்றம்கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பத்மநாபன், தங்கவேல்ஆகியோரைக் கொண்ட டிவிஷன் பெஞ்ச் அளித்த தீர்ப்பு வருமாறு:
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட ஏராளமான கைதிகளை உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.
உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து விடுதலை பெற முடியாத நிலையில் இன்னும் பலர் சிறையில்இருப்பதாக வக்கீல் ஒருவர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
இந்திய அரசியல் சாசனத்தின் 226வது பிரிவின்படி எங்களுக்கு தரப்பட்ட அதிகாரத்தின் கீழ்நாங்களாகவே ஹேபியஸ் கார்பஸ் மனுவாக பாவித்து இந்த தீர்ப்பை அளிக்கிறோம்.
குண்டர் தடுப்புச் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பலர் ஓராண்டு சிறையில்அடைக்கப்படுகின்றனர். இதை எதிர்த்து அதிகாரிகளிடம் முறையீடு செய்ய கைது செய்யப்பட்டவர்களுக்குஉரிமை உண்டு.
இத்தகைய உரிமை உண்டு என்ற விவரத்தை கைது உத்தரவிலேயே அதிகாரிகள் குறிப்பிட வேண்டும்.அவ்வாறு குறிப்பிடாவிட்டால் கைது உத்தரவு செல்லாது. அதேபோல் இரு சட்டங்களின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவேஅப்படிப்பட்டவர்களும் தொடர்ந்து சிறையில் இருப்பது துரதிருஷ்டவசமானது.
குண்டர் தடுப்புச் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் கடந்த ஆகஸ்ட் 21ம்தேதிக்கு முன்பு கைதாகி சிறையில் இருப்பவர்கள் பற்றிய விவரத்தை 10 நாட்களுக்குள்நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், போலீஸ்கண்காணிப்பாளர்களுக்கும் உத்தரவிடப்படுகிறது.
இரு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்றுஅரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications