இந்திராவை நினைவு கூர்ந்த காங்கிரஸார்
சென்னை:
மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் நாடு முழுவதும் செவ்வாய் கிழமை அனுசரிக்கப்பட்டது.
சென்னையில் தமாகா அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் இந்திரா படத்திற்கு மூப்பனார் மலரஞ்சலி செலுத்தினார்.
அவரது கட்சி நிர்வாகிகள் தனுஷ்கோடி ஆதித்தன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், ஜெயந்தி நடராஜன், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரும் மறைந்த பிரதமர்இந்திராவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் மூப்பனார் தலைமையில் தமாகாவினர் பயங்ரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தமிழக காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றஅஞ்சலிக் கூட்டத்தில் இந்திரா படத்திற்கு மாநில தலைவர் இளங்கோவன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பிக்கள் அன்பரசு, கிருஷ்ணசாமி, கலிவரதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் காங்கிரஸார் அனைவரும்கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications