பாலஸ்தீன விமான நிலையம் மீண்டும் மூடப்பட்டது
காசா:
பாலஸ்தீன பகுதியில் உள்ள காசா சர்வதேச விமான நிலையம் பாதுகாப்பு கருதிமூடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ராணுவத்திற்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே செப்டம்பர் மாதம் 28-ம்தேதி தொடங்கிய வன்முறையில் 148 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில்பெரும்பாலனவர்கள் பாலஸ்தீனியர்கள்.
போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே இடைக்காலஅமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந் நிலையில் இஸ்ரேல் பாலஸ்தீன சர்வதேச விமான நிலையம் பாதுகாப்பு காரணமாகமூடப்பட்டுள்ளது. விமான நிலையத்தை மூடுவது இது மூன்றாவது முறை என பாலஸ்தீனஅதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விமான நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகளை இஸ்ரேலே கவனித்து வருகிறது, விமானநிலையத்திலிருந்து 20-க்கும் அதிகமான விமானங்கள் செயல்படுவதாக இஸ்ரேல் விமானநிலைய அதிகாரி தெரிவித்தார்.
திங்கள் கிழமையன்று இந்த விமான நிலையம் மூடப்பட்டது. முதலில் காலை 10 மணிவரை மூடப்பட்டிருக்கும் என கூறப்பட்டது. ஆனால் அதன் பின்பு புதன் கிழமை வரைவிமான நிலையத்தில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டு விமான நிலையம்மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டது என விமான நிலையத்தின் டைரக்டர் ஜெனரல்தெரிவத்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications