நிருபரைத் தாக்கிய அதிமுக தொண்டர் கைது
மதுரை:
மதுரையில் அதிமுக தொண்டரால் தினமலர் நிருபர் தாக்கப்பட்டார். அவரைத் தாக்கியதொண்டர் கைது செய்யப்பட்டார்.
இது பற்றி கூறப்படுவதாவது:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தென் மாவட்டங்களுக்கு 8 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது சுற்றுப்பயண விவரம் குறித்த செய்தியைச்சேகரிக்க பல்வேறு பத்திரிக்கை நிருபர்களும் உடன் சென்றுள்ளனர்.
இந் நிலையில், மதுரையில் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை தங்கிய ஹோட்டலுக்குவெளியே தினமலர் பத்திரிக்கையின் நிருபர் என். சுந்தரை அதிமுக தொண்டர் தாஸ்தாக்கினார். மேலும் அவரை தரக்குறைவாகவும், எச்சரிக்கை விடும் வகையிலும் தாஸ்திட்டியதாகக் கூறப்படுகிறது.
இத் தாக்குதலில் சுந்தருக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக்கூறப்படுகிறது. தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஹோட்டலில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஜெயலலிதா புறப்பட்டுச் சென்றபிறகு இத் தாக்குதல் நடந்துள்ளது. இத் தாக்குதல் குறித்து போலீஸார் வழக்குப் பதிவுசெய்து நிருபரைத் தாக்கிய தாஸை கைது செய்தனர்.
தினமலர் நிருபர் தாக்கப்பட்டதற்கு மதுரை நிருபர்கள் சங்கம் வன்மையானகண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications