ஈரோடு பள்ளிகளுக்கு யுனிசெப் நிதியுதவி

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 500 பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க ஐ.நா.சபையின் யுனிசெப் நிறுவனம் நிதியுதவி செய்யவுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் யுனிசெப் நிறுவனம் 500 பள்ளிகளுக்கு நிதியுதவிசெய்யவுள்ளது. நம்பியூர், சத்தி, கோபி, அம்மாபேட்டை, பவானிசாகர், பவானிஉட்பட இந்த சுற்றுப் பகுதியில் உள்ள பள்ளிகள் இதன் மூலம் பயனடையும்.

இந்த பள்ளிகளில் அடிப்படை வசதிகளான கழிப்பிடம் கட்டுதல், குடிநீர் வழங்குதல்,சுற்றுச் சுவர் கட்டுதல் ஆகிய பணிகளுக்காக இந்த நிதியுதவி கிடைக்கவுள்ளது.

இதுபற்றிய கருத்தரங்கு ஈரோட்டில் நடந்தது. இதில், பெற்றோர் ஆசிரியர் சங்கம்,பள்ளி நிர்வாகிகள், ஊராட்சித் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்தகருத்தரங்கில் பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்துவிவாதிக்கப்பட்டன.

கடந்த ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட 30 கோடிரூபாய் நிதி ஒதுக்கீடு பெரம்பலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு விட்டது. இதனால்இந்த ஆண்டு யுனிசெப் நிறுவனத்தின் நிதியுதவி கிடைக்கும்.

கடந்த ஆண்டு கோவை, வேலூர், கூடலூர் ஆகிய மாவட்டங்களில் இந்த நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டன. இதனையொட்டி இந்த ஆண்டும் இத்தகையநிதியுதவியை பிற மாவட்டங்களுக்கு யுனிசெப் வழங்கவுள்ளது.

இதன் மூலம் சிறு பாலங்கள், சமுதாயக் கூடம் ஆகியவையும் கட்ட நிதி கிடைக்கும்என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+