அனுபவ் மோசடி ..வழக்கைத் தொடர கோர்ட் அனுமதி
சென்னை:
அனுபவ் நிதி நிறுவன மோசடி தொடர்பாக அதில் டெபாசிட் செய்தவர்களின் சங்கம்தொடர்ந்த ரிட் மனு மீதான விசாரணையைத் தொடர சுப்ரீம் கோர்ட் அனுமதிஅளித்துள்ளது.
பொதுமக்களுக்கு அதிக வட்டி தருவதாகக் கூறி அவர்கள் முதலீடு செய்த பணத்தை பலதனியார் நிதி நிறுவனங்கள் மோசடி செய்து வந்தன. அது போன்ற நிறுவனங்களில்சென்னையைச் சேர்ந்த அனுபவ் நிறுவனமும் ஒன்று.
இந்த நிறுவனமும் பொது மக்கள் பணத்தை தராமல் ஏமாற்றியதைத் தொடர்ந்து இந்தநிறுவனத்தின் தலைவர் நடேசன் கைது செய்யப்பட்டார். அனுபவ் முதலீட்டாளர்கள்சங்கம் என்ற பெயரில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.அதில் இந்திய செக்யூரிட்டி மற்றும் பணப் பரிவர்த்தனை வாரியத்தையும் (செபி)சேர்த்திருந்தனர்.
"செபி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அனுபவ்முதலீட்டாளர்கள் சங்கத்தினர் சார்பாக வாதாடிய வக்கீல், சென்னை உயர் நீதிமன்றத்தில்தாக்கல் செய்த மனுவில் பிரதிவாதிகள் பட்டியலிலிருந்து செபியை நீக்கி தாக்கல்செய்யப்பட்ட மனுவை உ.யர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதால் செபியின் மனுவைதள்ளுபடி செய்யுமாறு கூறினார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் சென், ராஜூ ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வழக்கைதள்ளுபடி செய்தது. இதையடுத்து அனுபவ் வழக்கை விசாரிக்க இருந்த தடை நீங்கியது.