இலங்கை மக்கள் அமைதி காக்க சந்திரிகா வேண்டுகோள்
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப் புலிகள் தூண்டிவிடும் வன்முறையில் சிக்காமல், நாட்டு மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றுஅதிபர் சந்திரிகா குமாரதுங்கா ரேடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் ரேடியோ மூலம் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள்:
நுவரேலியா பகுதியில் சிங்களர்களுக்கும், தமிழர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்குஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறையைத் தூண்டும் விதத்தில் விடுதலைப் புலிகள் நடந்து கொள்கின்றனர். இதனால் கலவரம்பெரிதாகி விடாதவாறு நாட்டு மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும்.
இலங்கையின் மத்தியப் பகுதியில் வாழும் மக்கள் அனைவரும் தேயிலை உற்பத்தியை நம்பி வாழ்கின்றனர். நாட்டின் பொருளாதாரத்தில்பெரும்பங்கு வகிப்பது தேயிலை உற்பத்திதான். நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைப்பதே புலிகளின் நோக்கம்.
தேயிலை உற்பத்தி அதிகம் உள்ள இலங்கையின் மத்தியப் பகுதியில் வன்முறையைத் தூண்டிவிட்டு, அங்கு பொருளாதார நிலையை சீர்குலைக்கப்பார்க்கிறார் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். அதனால்தான் அவர் அங்கு மனித நேயமற்ற முறையில் கலவரங்களைத் தூண்டிவிடுகிறார்.
இதையெல்லாம் தாண்டி நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும். பல்வேறு மதத் தலைவர்கள், பிற தலைவர்கள், தனியார்அமைப்புக்கள் அனைவரும் இவ்விஷயத்தில் அரசுக்குத் தங்களது முழு ஒத்துழைப்பையும் கொடுக்க வேண்டும்.
போலீஸார் வன்முறை பரவி விடாமல் தடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். கலவரம் குறித்த எந்தவிதவதந்திகளையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம்.
நுவரேலியா மற்றும் பாடுல்லா பகுதிகளில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருவதால் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்என்று ரேடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார் அதிபர் சந்திரிகா.
முன்னதாக, இலங்கையில் பண்டாரவிளை மறுவாழ்வு மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த, சரண் அடைந்த விடுதலைப் புலிகள் மீதுகிராமத்து மக்கள் நடத்திய தாக்குதலில் 29 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதையடுத்து மத்திய இலங்கையில், சிங்களர், தமிழர்இடையே மோதல் வெடித்தது.
கொலை செய்யப்பட்டவர்களில் ஒருவரின் இறுதிச் சடங்கு நுவரேலியா பகுதியில் நடந்து கொண்டிருந்த போது வன்முறை மூண்டது. இதுதொடர்பாக 14 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
வன்முறை நடந்த பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பஸ் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications