For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரையில் ஒரு "மகா கொள்ளை

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரையில் ஜவுளிக் கடையின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து ரூ. 3.5 லட்சம் மதிப்புள்ள பட்டுச் சேலைகளை சிலர் திருடிச் சென்றனர்.

மதுரை அருகே உள்ள கல்லுப்பட்டியில் நெசவாளர் கூட்டுறவு சங்கம் உள்ளது. இங்கு நெசவாளர்களிடமிருந்து வாங்கப்பட்ட பட்டுச் சேலைகள் இருப்புவைக்கப்பட்டிருந்தன.

சனிக்கிழமை இரவு சிலர் இந்த சங்கத்தின் கடைக்கு வந்துள்ளனர். அங்குள்ள பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கடையிலிருந்த 92 பட்டுச் சேலைகள்மற்றும் பல ஜவுளிகளைத் திருடிக் கொண்டு தப்பினர்.

ஞாயிற்றுக்கிழமை காலைதான் இந்த திருட்டுக் குறித்துத் தெரிய வந்தது. கல்லுப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X