"கோவில் சொத்துக்கள் கல்வெட்டில் பதியப்படும்
பழனி:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சொத்துக்களின் விவரம் பொதுமக்கள்பார்வைக்காக கல்வெட்டில் பதிக்கப்பட இருப்பதாக இந்து அறநிலைய்துறைஅமைச்சர் தமிழ் குடிமகன் தெரிவித்தார்.
பழனி முருகன் கோவில் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பேசுகையில், இந்துஅறநிலையத்துறையின் கீழ் 44 கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் கல்விக்காக4ஆயிரத்து 990 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டாலும், மரத்தடியில் அமர்ந்து கல்விபயிலும் நிலை இருந்து வருகிறது.
போதுமான இருக்கை வசதி இல்லாததே இதற்கு காரணம் ஆகும். இந்த நிலை மாறிஇந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள கல்வி நிலையங்களை முழுமைப்படுத்தநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கோயில் சொத்துக்களை கல்வெட்டில் பதிவு செய்து பொது மக்கள் காணும் வகையில்ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது. முதல் கட்டமாக,மதுரை மீனாட்சி அம்மன் கோவில்சொத்துக்கள் கல்வெட்டில் பதிக்கப்பட இருக்கிறது என்றார் அவர்.