அசார், அஜய் சர்மாவுக்கு எதிரான ஆதாரங்களை ஆய்கிறது சிபிஐ
டெல்லி:
மேட்ச் பிக்ஸிங் தொடர்பான சிபிஐ விசாரணை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் மற்றும் முன்னாள் வீரர் அஜய் சர்மாஆகியோருக்கு எதிரான ஆதாரங்களை சிபிஐ மதிப்பிட்டு வருகிறது.
மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் 5 பேர் மீது சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. இருப்பினும் இவர்களில் அசாருதீன், அஜய் சர்மா இருவரும் அரசுஊழியர்களாக உள்ளனர். இதையடுத்து அவர்கள் மீது ஊழல் வழக்குத் தொடரும்முயற்சியில் சிபிஐ இறங்கியுள்ளது.
மேலும், அந்த வழக்குத் தொடருவதற்கு முன் சட்ட நிபுணர்களிடம் சட்ட ஆலோசனைகேட்பதற்காக அசார் மற்றும் அஜய் சர்மா ஆகியோருக்கு எதிரான ஆதாரங்களைமதிப்பிட்டு வருவதாக சிபிஐ இணை இயக்குநர் ஆர்.என். சவானி தெரிவித்தார்.
சட்ட நிபுணர்களிடமிருந்து ஆலோசனை பெறப்பட்ட பிறகு அசார் மற்றும் அஜய் சர்மாமீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும் என்றார் அவர்.
மேட்ச் பிக்ஸிங் என்ற மிகப் பெரிய குற்றச்சாட்டை விசாரிக்கும் பொறுப்பை ஏற்றுஅதைத் திறம்படி முடித்துவிட்டோம். அறிக்கை இப்போது வெளியிடப்பட்டுள்ளநிலையில், கிரிக்கெட் வீரர்கள் மீது தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களைமக்கள் தெரிவிக்கலாம்.
மேலும், அந்த ஆதாரங்களை வைத்து குற்றவாளிகளைத் தண்டிக்க முடியும்.குற்றமற்றவர்கள் தண்டிக்கப்படுவதிலிருந்து தடுக்கப்படும்.
கிரிக்கெட் சூதாட்டக்காரர் முகேஷ் குப்தாவிடம் விசாரணை நடத்தியபோது அவர்தெரிவித்த தகவலின் அடிப்படையில்தான் கிரிக்கெட் வீரர்கள் மீது மேட்ச் பிக்ஸிங்குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது என்பது தவறு.
6 மாத கால விசாரணையின்போது சுமார் 207 கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் மற்றும்புக்கிகளிடம் நாங்கள் விசாரித்தோம். அதன்பிறகுதான் நாங்கள் ஒரு முடிவுக்குவந்தோம்.
அதே நேரத்தில் கிரிக்கெட் சூதாட்டக்காரர்களிலேயே மிக முக்கியமான முகேஷ் குப்தாதெரிவித்த தகவல்களின் அடிப்படையிலும் கிரிக்கெட் வீரர்கள் மீது நாங்கள் குற்றம்சாட்டியுள்ளோம்.
மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர்கள், அன்னியச் செலாவணி மோசடியிலும்ஈடுபட்டதாகத் தெரிய வந்துள்ளது. அது பற்றி அமலாக்கப் பிரிவு அதிகாரிகள்விசாரணை நடத்துவார்கள் என்றார் சவானி.ஐ.ஏ.என்.எஸ்.