கனடாவில் இலங்கைத் தமிழர் கோஷ்டிகளிடையே மோதல் - 2 பேர் சாவு
டொரான்டோ:
கனடாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர் கோஷ்டிகளிடையே மோதல் ஏற்பட்டது.
கனடா தலைநகர் டொரான்டோவின் புறநகர்ப் பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமைநடந்த இம் மோதலில் 2 இளைஞர்கள் பலியானார்கள். இரண்டு பேர் காயமடைந்தனர்.
டொரன்டோவின் கிழக்கே உள்ள ஸ்கார்போரோ என்ற இடத்தில் நடந்த மோதலில்கைத் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மோதலில் பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.இதனால், இறந்தவர்களின் பெயர்களை டொரான்டோ மாநகரப் போலீஸார் இன்னும்அறிவிக்கவில்லை.
கனடாவில் தற்போது 2 லட்சம் இலங்கைத் தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்களிடையேவி.வி.டி. என்பவர் தலைமையில் ஒரு கோஷ்டியும், ஏ.கே. கண்ணன்ஸ் என்பவர்தலைமையில் ஒரு கோஷ்டியும் இயங்கி வருகின்றன.
இரு கோஷ்டிகளிடையே அடிக்கடி மோதல் நடைபெறுவது வழக்கம் என்றும்,இப்போது டொரான்டோவில் நிலைமை சீரடைந்துவிட்டதாகவும் போலீஸார்தெரிவித்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications