For Daily Alerts
Just In
விடுதலைப் புலிகள் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் பலி
கொழும்பு:
விடுதலைப் புலிகளின் ராக்கெட் தாக்குதலில் இலங்கை கடற்படை படகு தகர்ந்தது. இதில் 2 ராணுவ வீரர்கள் இறந்தனர்.
இலங்கையில் கல்பிட்டியா கடல் பகுதியில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான 2 படகுகள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தன. அப்போது இந்தப்படகுகள் மீது புலிகள் ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தினார்கள்.
இதில் ஒரு படகில் தீப்பற்றியது. பின்னர் அந்தப்படகு நீரில் மூழ்கியது. இந்தப் படகில் 7 கடற்படை வீரர்கள் இருந்தனர். இவர்களில் 5 பேர்மீட்கப்பட்டனர். மீதியுள்ள 2 பேரைக் காணவில்லை. அவர்கள் இறந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
Comments
Story first published: Monday, October 2, 2000, 5:30 [IST]