கலகக் கும்பலால் பிடிக்கப்பட்ட 5 பிஜி ராணுவ வீரர்கள் விடுதலை
சுவா:
பிஜியில் வியாழக்கிழமை காலை புரட்சிக் கும்பால் துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்ட 5 ராணுவ அதிகாரிகள்விடுவிக்கப்பட்டனர்.
ராணுவ தலைவர் பிராங் பெய்னிமாராவின் உத்தரவுப்படி, ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தி ராணுவத் தலைமையகத்தில் பிணைக்கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்ட 5 ராணுவ அதிகாரிகளையும் மீட்டனர்.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் ஹோவர்டு பொலிடினி கூறியதாவது:
ராணுவ அதிகாரிகள் தங்கியிருக்கும் குயின் எலிசபெத் மாளிகையில், புரட்சிக் கும்பல் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதையடுத்து தலைநகர் சுவாவில்பதட்டம் ஏற்பட்டது.
இதில் 5 ராணுவ அதிகாரிகள் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடந்தபோது 30 க்கும்மேற்பட்ட ராணுவ அதிகாரிகள் பாதுகாப்பான இடத்திற்கு தப்பி விட்டனர். அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது தெரியவில்லை. அவர்களைத் தேடும்முயற்சியில் பிற ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகரின் முக்கியச் சாலைகளில் ராணுவ வீரர்கள் சோதனை நடத்தி வருகிறார்கள். ராணுவ அதிகாரிகள்தங்கியிருக்கும் குயின் எலிசபெத் மாளிகை வளாகத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தலைநகர் சுவாவிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நபோவா பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கலகத்தில் தொடர்புடைய 3 பேர் நசோரி விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்தி கும்பலைப் பிடிக்கும் முயற்சியில் போலீஸார்தீவிரமாகச் சோதனை நடத்தி வருகின்றனர்.
நகரின் முக்கியச் சாலைகளில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்கள் ரோந்து சுற்றி வருகின்றனர். வியாழக்கிழமை இரவு 8 மணிக்குள்ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார்.
பிஜி தீவின் இடைக்கால பிரதமர் லைசோனியா குவாரசே கூறுகையில், புரட்சிக்காரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய பகுதிகளிலும், ராணுவ நடவடிக்கைமையத்திலும் ராணுவ வீரர்கள், தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர்.
நாட்டின் அரசியில் ஸ்திரத்தன்மைக்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் பங்கம் ஏற்படாதவாறு அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். திடீரென்றுஏற்பட்ட இந்த கலகத்தை ராணுவம் விரைவில் முடிவுக்குக் கொண்டு வரும். வியாழக்கிழமை இரவுக்குள் சுவாவில் சகஜ நிலை திரும்பும் என்றார்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications